ஆரோக்கியமான, நீளமான, அடர்த்தியான, கருத்த கூந்தல் அமையப் பெற சில எளிய வழிகள்
முடி உதிர்தல்
- வேப்பிலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் வேகவைத்து ஆறியபின் அந்த நீரால் தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
புழுவெட்டு
- நவச்சாரத்தைத் தேனில் கலந்து தடவினால் முடிகொட்டுவது நிற்கும்; புழுவெட்டு மறையும்.
வழுக்கை
- கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணையைத் தலைக்குத் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை
- நெல்லிக்காயை அடிக்கடி உண்டால் இளநரை மாறும்.
முடி கருப்பாக
- நெல்லிக்காயைத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயுடன் கொதிக்க வைத்து அந்த எண்ணையைத் தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
முடி நன்கு வளர
- அரைத்த கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
0 comments:
Post a Comment